எது நாஸ்திகம்? விடுதலை - 30.7.1950

Rate this item
(1 Vote)

“மக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் பகுத்தறி வோடு யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு, தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு 'கடவுள் உண்டா,

இல்லையா?' என்று கேட்கப்படுகிறது." உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல் லப்படுகின்ற வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப் படக் கூடியதாய் இருந்து வருகின்றது. கார ணம் என்னவென்று பார்ப்போமானால், அவ்வார்த்தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக்

கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்ப டுவதைப்பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும், வெறுப்புக்கொள் ளவும், புரோகிதர்கள், பாதிரிகள், மவுல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர, கடவுள் என்பதைப்பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படா மல் இருப்பதோடு, அது (கடவுள் என்பது) மனதிற்கும் சக்திக்கும் எட்டாதது என்பதாகவும், அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. இப்படி இருந்தபோதிலும், என்றைய தினம் கடவுள் என்கிற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப்பட்டதோ, அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதம் ஏற்பட்டு வெகுகால மாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு, நாளது வரை முடிவு பெற முடியாமலே இருந்து வருகின்றது.

உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான பல மதங்களும்கூட, அதாவது சூனிய மதம், நிரீஸ்வர மதம், உலகாயத மதம், நாஸ்திக மதம் என்பது போன்ற பல உண்டு. என்றாலும், கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்து அதை அமுலுக்குக் கொண்டு வந்து, மற்றும் உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்ப பிரச்சாரம் செய்ய ஏற்பாடுகள் சாதாரணமாக இந்த இருபதாவது நூற்றாண்டில்தான் தைரியமாகவும், பலமாகவும் செய்ய முடிகின்றதென்பதாகவும் தெரிய வருகின்றது.

ஏனெனில், இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும் புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலும், கடவுள் பிரச்சாரத்தின் பேரால் கவுரவமும், வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வந்தவர்க ளின் ஆதிக்கத்திலும் இருந்து வந்ததாலும், உலகத்திலுள்ள அரசாங்கங்களும் மதத்துடனும், கடவுளுடனும் பிணைக்கப் பட்டே இருந்ததாலும் கடவுளை மறுக்கும் அபிப்பிராயத் திற்கோ, கூட்டத்திற்கோ நாட்டில் ஆதரவு இல்லாமல் போன தோடு, அவர்கள் மீது தோஷமும் கற்பிக்கப் பட்டு அந்த அபிப்பிராயம் வலுக்க முடியாம லும் பரவ முடியாமலும் போய்விட்டது.

ஆனால், 'இந்த நூற்றாண்டில் கடவுள் மறுப்பு என்பது பாமர மக்களுக்குள் ஒரு வித வெறுப்பும், அதிருப்தியும் தரக் கூடிய தாயிருந்தாலும், மற்றும் கடவுள் பேரால், அல்லது கடவுள் சம்பந்தமான மோட்சம், 

சாஸ்திரம், கதை, புராணம், பிரச்சாரம் ஆகியவைகளின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மிகுதியும் ஆத்திரத் தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், நடுநிலையுள்ள அறிஞர் களால் இவ்விஷயம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஆலோசிக் கப்பட்டு வருவதும், அவ்வித அபிப்பிராயக்காரர்களைப் பெரி தும் அறிவாளிகள் என்றும், ஞானவான்கள் என்றும் சொல்லுவ தும், மதிப்பதுமாய் இருந்து வருகின்றன.

மேல்நாட்டு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களுக்குள் இன்றும் அநேகர் நாஸ்திகர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ருசியா, சைனா முதலாகிய இடங்களின் முக்கிய பட்டணங்களில் கடவுளை நிலைப்படுத்தும் மதங்களை எதிர்க்கவும், நாஸ்திகத் தைப் பரப்பவும் என்றே பல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றிற்காக பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவை கள் வெளியிடப்பட்டும் வருகின்றன. 9

குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க் பட்டணத்தில் நாஸ்தி கத்தை உலகமெங்கும் வியாபிக்கச் செய்வதற்கான சங்கம் என்னும் பெயரால் ஒரு ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்து அதன்மூலம் பல ஆண்டுகளாக நல்ல வேலைகள் மும்முரமாய் செய்யப்பட்டு வருகின்றன. அங்கிருந்து நமக்கு அனுப்பப்பட் டிருக்கும் அறிக்கையின்படி அச்சங்கமானது பிரச்சாரத்திற்காக வும், துண்டுப் பிரசுர விநியோகத்திற்காகவும் வருஷம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேலாகவே செலவு செய்து வந்திருக்கிறது. -

இப்போது இந்த வருஷத்தில் 'கிறிஸ்துவ மதம் வெடிப்புக் கண்டுவிட்டது' என்கின்ற பேராலும், 'மதம் என்றால் என்ன?', 'கடவுள் என்றால் என்ன?', 'கடவுள் இல்லாத முற்போக்கு' ஆகிய இவை போன்ற தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான

துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியாக் கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது. சங்க அங்கத்தினர்கள் வருஷத்திற்கு வருஷம் 100-க்கு 50 வீதம் உயர்ந்து கொண்டு வருவ துடன், பல இடங்களில் கிளை ஸ்தாபனங் கள் ஏற்பட்டு வெளிநாடுகளிலும்கூட பிரச்சா ரங்கள் செய்யப்பட்டு வருவதாய்க் காணப்ப டுகிறது. வேறு பாஷைகள் மூலமும் சைனா 

முதலிய இடங்களுக்கு ஆட்களை அனுப்பி இதுபோன்ற பிரச்சாரமும், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதலும் நடை பெற்று வந்திருப்பதாகவும் காணப்படுவதோடு, ஒவ்வொரு கனவான் ஒவ்வொரு வேலையை ஏற்றுக்கொண்டு, திருப்திதரத் தக்க அளவு பிரச்சாரம் செய்திருப்பதாயும் காணப்படுகின்றது.

இப்படியே லண்டன், பாரீஸ் முதலிய பட்டணங்களில் சில ஸ்தாபனங்கள், அதாவது, 'தாராள நினைப்புக்காரர்கள் சங்கம்' என்றும், 'அறிவாளிகள் சங்கம்' என்றும், 'உண்மை நாடுவோர் சங்கம்' என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி அதுபோலவே பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் சில துக்கு வயது 40, 50-க்குமேல் ஆகியிருந்தபோதிலும் அவைகள் இப்போதுதான் மிக்க பிரபலமாயும், செல்வாக்காயும் நடை பெற்று வருகின்றன என்பதை தெரிவிக்கவே இவற்றை மேற் கொள்களாகக் குறிப்பிட்டோம். மாங்கல்லை இனி அதனால் ஏற்படும் கெடுதல் என்ன? நன்மை என்ன? என்பவைகளைப்பற்றி யோசிப்போம். சாதாரணமாக மனிதன் நாஸ்திகனாயிருந்தால் அதாவது கடவுள் நம்பிக்கையில்லாதவ னாயிருந்தால் ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கமாட்டான் என்றும், திருட்டு, பொய், மோசம், ஒருவன் சொத்தை ஒருவன் அபகரித்தல், முறை தவறி கலத்தல், மக்களை இம்சித்தல் முதலாகிய காரியங்கள் செய்ய பயப்படமாட்டான் என்றும் சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி கவனிக்கும் முன்பு, உண் மையான கருத்தில் இந்த கடவுள் நம்பிக்கையுள்ள மனிதன் எவனாவது உலகில் இருக்கின்றானா என்பதை முதலில் யோசிப் 'போம்.

PS சாதாரணமாக கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும் பான்மையோர்கள் கருதிக் கொண்டிருக்கும் கருத்து என்னவெ னில், சர்வ சக்தியும், அதாவது உலகம், உலகிலுள்ள ஜீவராசிகள், புல் பூண்டு, தாவரங்கள் முதலிய யாவும் தனது இச்சை யால் உண்டாக்கப்பட்டு தனது சக்தியால் இயங்கச் செய்யப்படுகின்றதானதும், எங் கும் வியாபித்திருப்பதானதும், எல்லாவற் றையும் சமமாய் பார்ப்பதானதும், சுருக்க மாய்ச் சொல்வதானால் அவனன்றி 

(அக்கடவுள் சித்தம் அன்றி) ஒரு அணுவும் அசையாததான சக்தியுடையதானது என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கருத்து சரியா தப்பா என்று யோசிப்பதற்கு முன்னும், இப்படி ஒரு வஸ்து இருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்னும், இப்படி மக்கள் எண்ணிக் கொண்டிருப்ப தானது உலகத்திற்கு நன்மையா, தீமையா என்று முடிவு செய்வதற்கு முன்னும் இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனா வது உண்மையில் நம்பி இருக்கின்றானா? அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்தபடி அவனது மனம், மெய், மொழி ஆகியவைகளால் ஏற்படும் நடவடிக்கைகள் காணப்படுகின்ற னவா? அதாவது எந்த மனிதனுடைய நடவடிக்கையில் இருந்தா வது மேற்கண்ட சக்தியும், குணமும் கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற ஒரு மனிதனின் நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா? என்பதை யோசிப்போமா னால், இதுவரை ஒரு மனிதனையாவது அம்மாதிரி நம்பிக்கை யின்மீது நடக்கின்றான் என்பதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை யென்றும், அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக ஒரு மனிதன் கூட தனது வாழ்க்கையில் எண்ணி இருக்க முடியவில்லை என்றும் தான் சொல்லவேண்டி இருக்கின்றதே தவிர வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

இது, அதாவது, இப்படிச் சொல்லுவதானது, சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல் கடவுள் பிரச்சாரம் செய்பவர்கள் ளிலாவது, கடவுளைக் கண்டவர்களாக சொல்லப்பட்டவர்களி லாவது, கடவுளுக்குச் சமமாகக் கருதும் சமயாச்சாரிகள், மதத் தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலாகியவர்களுக் குள்ளாவது, நாஸ்திகத்தைக் கண்டு பயந்து நடுநடுங்கித் துயரப் பட்டுக் கண்ணீர் வடிக்கும் ஆஸ்திகப் பண்டிதர்கள், சாஸ்திரி

கள், வைதீகர்கள் முதலாகியவர்களுக்குள்ளா வது மற்றும் மகாத்மாக்கள், வேதாந்திகள், பெரியோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்ததாகவோ இருப்பதாகவே சொல்லுவதற்கில்லையே.

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு தனி மனிதனென்றும், தனக்காக தான் செய்ய வேண்டிய காரியம் பல உண்டு என்றும், 

அவற்றை தினமும் செய்வதாகவும், அவனவன் இஷ்டப்பட்ட படி செய்து கொண்டும், அதனதன் பலனை அடைந்து கொண் டும், அதுபோலவே மற்றவர்களையும் செய்யும்படியும் தூண் டிக் கொண்டும், மற்றவர்கள் செய்வதில் குணதோஷம் கற்பித் துச் சொல்லிக்கொண்டும், அதற்காக விருப்பு வெறுப்பு காட்டிக் கொண்டும், மகிழ்ச்சி துக்கமடைந்து கொண்டும்தான் இருக்கின் றானே ஒழிய, கடவுளின் சர்வ சக்தியைப் பற்றியோ, சர்வ வியாபகத்தைப்பற்றியோ, சர்வ தயாபரத்தைப்பற்றியோ, சர்வ சமத்துவத்தைப்பற்றியோ நம்பி இருப்பவன் ஒருவனும் இல் லையென்றுதான் சொல்லவேண்டும். இயக

ஆகவே, இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை என்றும், இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்கவில்லை என்றும் தான் முடிவு கட்டவேண்டியிருக்கின்றதென்பது ஒரு பக்கம் இருந்தாலும், அப்படி ஒன்று இருப்பதாகக் கற்பித்து நம்பச் செய்வதினாலாகிலும் காரியத்தில் ஏதாவது - அதாவது கடவுள் நம்பிக்கையினால் ஏற்படுக் கூடும் என்று கருதுகின்ற, முன் சொன்ன காரியங்களாவது நடக்கின்றதா என்று பார்த்தால், திருடாதவன், பொய் சொல்லாதவன், பிறர் பொருளை வஞ்சிக் காதவன், முறை தவறி கலவி செய்யாதவன், பிறருக்கு இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள் செய்யாதவன் என்பவன் ஒருவனைக்கூட காண முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அன்றியும், திருட்டு, வஞ்சகம், பொய், முறை தவறி கலத்தல் முதலாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே கஷ்டமான காரியங்களாக இருக்கின்றன. என்றா லும், மக்கள் எதை மேற்கண்ட மாதிரி குணங்கள் என்று கருதுகிறார்களோ அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத் தையும், நம்பிக்கையையும் உண்டாக்குவதாலோ, நிலை நிறுத்து வதாலோ முடிகின்றதா என்பதுதான் இங்கு யோசிக்கத்தக்கதாகும்.

போம் இது ஒருபுறமிருக்க, மேற்கண்ட - அதா வது கடவுள் என்பதற்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் உடையதான ஒரு கடவுள் என் பது இல்லை என்றும், அல்லது இருக்க முடியாது என்றும் கருதுகின்றவர்களிடத்தி லாவது முன் சொல்லப்பட்ட திருட்டு, 

பொய், வஞ்சகம், பிறரை இம்சிப்பது முதலிய குணங்கள், கடவுள் நம்பிக்கைக்காரர்களைவிட (ஆஸ்திகர்களைவிட) அதிக மாய் இருப்பதாகவாவது அல்லது பிற மக்களுக்கு ஆஸ்திகர்க ளைப் போன்ற நன்மை செய்யவில்லை என்றாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால், அதுவும் முடியாத காரியமாகத்தான் காணப்படுகின்றதே ஒழிய வேறில்லை .

atenatal - மக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்ட விதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதைவிட்டு விட்டு, தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத் துக்கொண்டு, "கடவுள் உண்டா இல்லையா?" என்று கேட்ப தும், "கடவுளை ஒப்புக்கொள்ளுகின்றாயா இல்லையா?" என்று கேட்பதும், "கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக்கொருவர் ஏன் வித்தியாசமாய் இருக்கவேண்டும்?'', "ஒருவன் பணக்காரனாகவும், ஒருவன் ஏழையாகவும் ஏன் இருக்கவேண்டும்?", "ஒருவன் கூன், குருடு, நொண்டி, குஷ்ட ரோகி முதலியவை உடையவனாகவும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்கவேண்டும்?'', "ஒருவனுக்கு ஏன் பத்து பிள்ளை, ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை?' என்றும், "இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித் தால், ஒருவர் நட்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடையவேண் டும்?'' என்பதுபோன்ற கேள்விகள் கேட்டு, அதன்மூலம் மேற்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களை பகுத்தறிவு இல்லாதவர்கள், ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலில் வாயடைக்கவேண்டுமானால், இம்மாதிரியாக தோற்றங்களில்

ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப்படு வதாலேயே (மேற்கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.

எப்படியெனில், சர்வ சக்தியுடைய கட வுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்றுபோலப் பார்ப்பவராயி ருந்தால், சர்வத்தையும் ஒன்றுபோலவே 

சிருஷ்டித்திருக்கலாம் அல்லவா? வேறு வேறாகக் காணப்படுவ தாலேயே, சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்.

ஏனெனில், நொண்டிக்கும், முடவனுக்கும், நல்லவனுக்கும், கஷ்டப்படுபவனுக்கும், கஷ்டப்படுத்துகிறவனுக்கும் ''கடவு ளே " காரணஸ்தனாயிருந்தால், கடவுளை சர்வ தயாபரத்துவமு டையவன் என்றும், பாரபட்சமில்லாத சர்வ சமத்துவ குணமு டையவன் என்றும் எப்படிச் சொல்ல முடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக்கூடிய சமாதானங்கள் ஒருபுற மாயிருக்க, ஆராய்ச்சியைக் கொண்டு அறியக்கூடிய சமாதானங் களைப்பற்றி சற்று கவனிப்போம். ஒரே கையால் அரிசியை கை நிறைய அள்ளி அள்ளி வேறாய் வைத்து, ஒவ்வொரு தடவை அள்ளிய அரிசியைத் தனித்தனியாய் எண்ணிப் பார்த் தால், அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப் பானேன்? அந்த மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவியலிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படு கின்றன? | 15 ஒரே பூமியில் ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும், முளைத்தவை களில் சில வளராமல் கூழையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும், சில முளைத்து நன்றாய்த் தழைத்தும் ஒரு மணிகூட இல்லாத வெறும் கதிராக வும் இருக்கக் காரணம் என்ன? மடமாடாக டங்யையானா - ஒரு வினாடியில் ஒரு பூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சொற்ப கிளைகளுடனும் வளருவதும், ஒன்று பதினாயிரக்கணக்காகக் காய்ப்பதும், ஒன்று நூற்றுக்க ணக்காகக் காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும், ஒன்று பூ விடாமலும், பிஞ்சு விடாமலும் வரடாயிருப்பதும் என்ன கார பணம்? கடவுள் ஒருவர். இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்று போல் இருக்கக் கூடாது? பாவக பார்

ஒரு சமயம் கடவுளே இந்தப்படி செய்தி ருப்பார் - என்று சொல்லுவதானால், அம்மரம், செடி, தானியம் முதலியவைகள் 

இப்படி பலன் அடைவதற்குக் காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும், சமாதானம் என்பது தானாகவே புலப்படும். மாம்ஸ்தாபா

(30.7.1950 "விடுதலை" இதழில் உப்ப ருங்காயம் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

விடுதலை - 30.7.1950

 
Read 45 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.